Ticker

6/recent/ticker-posts

தமிழ் இலக்கிய வரலாறு - 1












தமிழ் இலக்கிய வரலாறு - 1


1. வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி எனக் கூறியவர் யார்?

(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) நாமக்கல் கவிஞர்
(D) கம்பர்
Answer: (A) பாரதியார்

2. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளொடு முன்தோன்றி மூத்த குடி இவ்வரிகள் இடம்பெறும் நூல் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) புறப்பொருள் வெண்பா மாலை
(C) மணிமேகலை
(D) தொல்காப்பியம்
Answer: (B) புறப்பொருள் வெண்பா மாலை
  
3. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறுநல்லுலகம் எனக் கூறியவர் யார்?
(A) பனம்பாரனார்
(B) திருதக்கத் தேவர்
(C) கம்பர்
(D) சேக்கிழார்
Answer: (A) பனம்பாரனார்

4. இடைச்சங்கம் இருந்த இடம்?
(A) தென்மதுரை
(B) வடமதுரை
(C) கபாடபுரம்
(D) இவற்றில் எதும் இல்லை
Answer: (C) கபாடபுரம்

5. தமிழ்த் தூதர் என அழைக்கப்படுவர் யார்?
(A) ஒட்டக்கூத்தர்
(B) ஒளவையார்
(C) தனிநாயம் அடிகள்
(D) கபிலர்
Answer: (C) தனிநாயம் அடிகள்

6. பக்தியின் மொழி தமிழ் எனக் கூறியவர் யார்?
(A) சுந்தரர்
(B) அப்பர்
(C) தனிநாயம் அடிகள்
(D) திருநாவுக்கரசு
Answer: (C) தனிநாயம் அடிகள்

7. இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் எனக் கூறும் நூல் எது?
(A) திருக்குறள்
(B) பிங்கல நிகண்டு
(C) அகத்தியம்
(D) தொல்காப்பியம்
Answer: (B) பிங்கல நிகண்டு

8. முதல் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூல் எது?
(A) தொல்காப்பியம்
(B) இலக்கண விளக்கம்
(C) அகத்தியம்
(D) இவற்றில் எதும் இல்லை
Answer: (C) அகத்தியம்

9. கடைச்சங்கம் எங்கு இருந்தது?
(A) தென்மதுரை
(B) வடமதுரை
(C) கபாடபுரம்
(D) இவற்றில் எதும் இல்லை
Answer: (B) வடமதுரை

10. தென்தமிழ் நாட்டுத் தீதுதீர் மதுரை இவ்வரி இடம் பெறும் நூல் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) புறப்பொருள்  வெண்பா மாலை
(C) மணிமேகலை
(D) தொல்காப்பியம்
Answer: (A) சிலப்பதிகாரம்


Post a Comment

0 Comments