
தமிழ் வினா விடை - 3 (இலக்கணம் - எழுத்து)
1. இதழ் குவியா உயிர்கள் மொத்தம் எத்தனை
அ) 4, ஆ) 7, இ) 5, ஈ) 6
2. உருபுகளை ஏற்காத பெயர்கள் யாவை?
அ) அவன், அவள், அது, ஆ) நான், நீயிர், நீவிர், இ) தான், தாம், யாம், ஈ) யார், யாது
3. சிறப்புப் பாயிரம் செய்யத் தகுந்தோர் எத்தனை பேர் என நன்னூல் குறிப்பிடுகின்றது.
அ) 2, ஆ) 5, இ) 4, ஈ) 6
4. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
அ) 4, ஆ) 8, இ) 6, ஈ) 9
5. தோன்றல், திரிதல், கெடுதல் என்ற மூன்றும் இடம்பெறும் புணர்ச்சி வகை
அ) இயல்பு, ஆ) அல்வழி, இ) வேற்றுமை, ஈ) விகாரம்
6. மருங்கொலி என்பது எது?
அ) க்,ச், ஆ) ய்,வ், இ) ல்,ள், ஈ) ர்,ழ்
7. நன்னூலின் கடவுள் வாழ்த்து யாரைப் போற்றுகிறது?
அ) சிவன், ஆ) திருமால், இ) புத்தர், ஈ) அருகன்
8. ’ப்’ என்ற எழுத்து எத்தனை உயிருடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்
அ) 6, ஆ) 8, இ) 12, ஈ) 10
9. ஒருசொல் வடமொழி தமிழ் இரண்டிலும் ஒரேமாதிரி ஒலித்தால் அதற்கு என்ன பெயர்?
அ) தற்பவம், ஆ) தற்சமம், இ) வடமொழியாக்கம், ஈ) தமிழாக்கம்
10. தொல்காப்பியர் விடுகதையை எப்பெயரால் குறிப்பிடுகின்றார்.
அ) வாய்மொழி, ஆ) அங்கதம், இ) பிசி, ஈ) முதுசொல்.
11. மாத்திரையை அளவு என பயன்படுத்திய இலக்கண ஆசிரியர் யார்?
அ) அகத்தியர், ஆ) குணவீரபண்டிதர், இ) தொல்காப்பியர், ஈ) புத்தமித்திரனார்.
12. கிளி எவ்வகை மாணாக்கனுக்கு உதாரணம்
அ) இடை, ஆ) கடை, இ) தலை, ஈ) முதல்.
13. கமலம் என்பது எவ்வகைச் சொல்
அ) இயற்சொல், ஆ) திரிசொல், இ) திசைச்சொல், ஈ) வடசொல்
14. ஓலையைத் திருமுகம் என்பது என்னவகை வழக்கு?
அ) மங்கலம், ஆ) இடக்கரடக்கல், இ) குழூஉக்குறி, ஈ) இயல்புவழக்கு
15. சிரித்த குழந்தை என்பது என்ன தொடர்?
அ) விளித்தொடர், ஆ) வினையெச்சத்தொடர், இ) பெயரெச்சத்தொடர், ஈ)வினைமுற்றுத்தொடர்
16. சின்னூல் என்று அழைக்கப்படும் நூல்
அ) நேமிநாதம், ஆ) நன்னூல், இ) தென்னூல், ஈ) இலக்கணவிளக்கம்
17. அறுவகை இலக்கணம் என்னும் நூலில் ஆறாம் இலக்கணம் எது?
அ) தவஇலக்கணம், ஆ) புலமைஇலக்கணம் , இ) மரபிலக்கணம், ஈ) வேற்றுமைஇலக்கணம்
18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ) ஆசுகவி, ஆ) விகடகவி, இ) சீட்டுக்கவி, ஈ) மதுரகவி
19. ஆய்தக்குறுக்கம் எத்தனை மாத்திரை பெறும்
அ) கால், ஆ) அரை, இ) முக்கால், ஈ) ஒன்று
20. நாவிளிம்பு வீங்கி அண்பல் அடியை வருடப்பிறக்கும் எழுத்துகள்
அ) ல,ள, ஆ) ர,ற, இ) ழ,ள, ஈ) ப,ம.
21. நாநுனி மேல் சென்று இடைஅண்ணத்தை வருடப்பிறக்கும் எழுத்து
அ) ர, ஆ)ழ, இ) ய, ஈ) வ
22. மொழிக்கு இறுதியில் வரும் உயிரெழுத்துகள் எத்தனை?
அ) 10, ஆ) 11, இ) 9, ஈ) 8
23. விலங்கு என்பது
அ) பொதுப்பெயர், ஆ) இடுகுறிப்பெயர், இ) இடுகுறிப்பொதுப்பெயர், ஈ) சிறப்புப்பெயர்
24. புளிநட்டான் என்பது
அ) காரியவாகுபெயர், ஆ) மும்மடிஆகுபெயர், இ) இருமடிஆகுபெயர், ஈ) உவமைஆகுபெயர்
25) பூந்தமல்லி என்பது
அ) இலக்கணம்உடையது, ஆ) மரூஉ, இ) மங்கலம், ஈ) இலக்கணப்போலி
26. பெற்றம் என்பது எந்நாட்டு வழக்கு
அ) பன்றிநாடு, ஆ) மலையமாநாடு, இ) தென்பாண்டிநாடு, ஈ) குட்டநாடு
27) ப், வ்என்பன
அ) இறந்தகால இடைநிலை, ஆ) நிகழ்கால இடைநிலை, இ) எதிர்கால இடைநிலை, ஈ) முக்காலமும் உணர்த்தும்
28. வடமொழியில் உள்ள உயிரெழுத்துகள் எத்தனை?
அ) 10, ஆ) 16, இ) 20, ஈ) 14
29. பகாப்பதத்தின் வரையறை யாது?
அ) 2 – 7 எழுத்துகள் , ஆ) 2- 8எழுத்துகள், இ) 2-9எழுத்துகள், ஈ) 2- 6எழுத்துகள்
30) மாறுகொளக்கூறல் என்பது
அ) உத்தி, ஆ) அழகு, இ) மதம், ஈ) குற்றம்
31. விற்பனைக்குச் சர்க்கரை உள்ளதா?
அ) ஏவல்வினா, ஆ) ஐயவினா, இ) கொளல்வினா, ஈ)ஐயவினா
32) நிலவலயம் என்பது
அ) தோன்றல், ஆ) திரிதல், இ) கெடுதல், ஈ) இயல்பு
33) நான் இப்படிச் செய்வேனா?
அ) இனமொழிவிடை, ஆ) வினாதல்விடை, இ) ஏவல்விடை, ஈ) சுட்டுவிடை
34. அன், ஆன்என்பது
அ) ஆண்பால் வினைமுற்று, ஆ) பெண்பால் வினைமுற்று, இ) பலர்பால் வினைமுற்று, ஈ) ஒன்றன்பால் வினைமுற்று
35. நேமிநாதத்தின் ஆசிரியர் பெயர் என்ன?
அ) பவணந்தி, ஆ) நேமிநாதர், இ) குணவீரபண்டிதர், ஈ) அப்பையதீட்சிதர்
36. நன்னூல் புதிதாகக் கூறும் இயல் என்ன?
அ) புணரியல், ஆ) எழுத்தியல், இ) பதவியல், ஈ) உயிரீற்றுப்புணரியல்
37. மெய்யெழுத்தும் சார்பெழுத்தும் பெறும் மாத்திரை
அ) ஓரளவு, ஆ) ஈரளவு, இ) மூவளவு, ஈ) அரையளவு
38. வினா எழுத்துகளாகத் தொல்காப்பியம்குறிப்பிடுவன யாவை?
அ)அ,இ,உ, ஆ)ஆ,ஏ,ஓ இ) எ,ஏ,ஓ, ஈ) ஏ,ஐ, ஓ
39. ஈரிதழ் ஒலிகள் யாவை?
அ) ஆ,ஊ, ஆ) ப,ம, இ) எ,இ, ஈ) கி,கூ
40. உட்பெறு புள்ளிஉருவாக்கும்மே என்று கூறியவர் யார்?
அ) நன்னூலார், ஆ) தொல்காப்பியர், இ) குணவீரபண்டிதர், ஈ) சாமிநாததேசிகர்
41. மொழியிறுதியில் எத்தனை மெல்லின மெய்கள் மட்டும் வரும்?
அ) 6, ஆ) 4, இ) 5, ஈ) 3
42. உடனிலை மெய்ம்மயக்கத்தில் எந்த மெய்யெழுத்துக்களுக்குப் பக்கத்தில் அந்த மெய்யெழுத்துகளே வரும்?
அ) க,ச,ந,ப, ஆ) க,ச,த,ப, இ) ப,ம, க, ச, ஈ) க,ம, ச, ப.
43. ஒருசொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறியபின்பும் அச்சொல் அதே பொருளைத் தருவது?
அ) முதற்போலி, ஆ) முற்றுப்போலி, இ) கடைப்போலி, ஈ) இலக்கணப்போலி
44. சே என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?
அ) சாதல், ஆ) சீழ், இ) எருது, ஈ) மதில்
45. ஞ் என்றமெய்யெழுத்து எத்தனை உயிருடன் கூடி மொழிக்கு முதலில் வரும்?
அ) 5, ஆ) 12, இ) 4, ஈ) 7
46. செய்யுளுக்கு மட்டுமே உரிய விகாரங்கள் எத்தனை?
அ) 6, ஆ)9, இ) 12, ஈ) 8
47. கல்லடிபட்டான் என்பது?
அ) வேற்றுமைத்தொகை, ஆ) அல்வழிப்புணர்ச்சி, இ) இயல்புப்புணர்ச்சி, ஈ) விகாரப்புணர்ச்சி
48. வடமொழியில் உள்ள உயிர் எழுத்துகளை இவ்வாறு அழைப்பர்?
அ) அச்சு, ஆ) ஹல், இ) வியஞ்சனம், ஈ) தற்சமம்
49. அவையல்கிளவி என்பதன் பொருள் யாது?
அ) மங்கலம், ஆ) இடக்கரடக்கல், இ) குழூஉக்குறி, ஈ) மரூஉ
50. புளிமரக் கிளவிக்குரிய சாரியை
அ) கரம், ஆ) அம், இ) காரம், ஈ) கான்
நன்றி
0 Comments