
1.”மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்
2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா
4.”தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை
6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
7. ”நல்ல மாணவன்” என்பது?
குறிப்புப் பெயரெச்சம்
8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?
விரைவு
9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?
2008, மே 19
10. உயிர் அளபெடையின் மாத்திரை?
3 மாத்திரை
11. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள்?
42
12. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல்?
அபிதான கோசம்
13. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?
5
14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?
எதுகை
15. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது?
அந்தாதி
16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
கவிமணி
17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?
உருவகம்
18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர்?
அழ. வள்ளியப்பா
19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
கவிமணி
20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர்?
அடுக்குத் தொடர்
21. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சிஅளித்தவர்?
பலராமன்
22. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி
23. ”தாய்மொழி” என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது
24. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த
மொழி”-எனும் தொடர் உணர்த்துவது?
தமிழின் பழமை
25. இரண்டாம் வேற்றுமை உருபு?
ஐ
26. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
அழகு
27. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
உம்மைத் தொகை
28. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்
29. ”தளை” எத்தனை வகைப்படும்?
7
30. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?
முற்றுப் போலி
31. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை?
8
32. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு?
3/4
33. திராவிட மொழி____________?
ஒட்டு நிலைமொழி
34. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்?
இளம் பூரணார்
35. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?
இடமிருந்து வலம்
36. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?
எமனோ
37. அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்?
தண்டியலங்காரம்
38. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்?
3
39. களவியலுக்கு உரை எழுதியவர்?
நக்கீரர்
40. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது?
3 (எழுத்து, சொல், பொருள்)
41. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
அகப்பொருள்
42. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்
43. முற்றியலுகரத்தில் முடியும் எண்?
7
44. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?
முல்லைப் பாட்டு
45. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும்?
தன்வினை
46. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
47. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல்
தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
உவமையணி
48. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?
திருமூலர்
49. ”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக்
கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
50. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்?
”ட” கர மெய்
51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ
முதலெழுத்து ஒன்றி வருவது?
மோனை
52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?
சத்திமுத்தப் புலவர்
53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்?
நேர்
54. வெண்பா எத்தனை வகைப்படும்?
5
55. அடியின் வகை?
5
56. வஞ்சிப்பாவின் ஓசை?
தூங்கலோசை
57. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
3
58. இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது?
இலக்கணப்போலி
59. சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது?
இடக்கரடக்கல்
60. வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
பலாச்சுளை
61.”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?
நக்கீரர்
62. அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா? தவறா?
சரி
63. தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?
பொங்கல்
64. பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்?
கரிகாலன்
65. பொய்கையார் இயற்றிய இலக்கியம்?
களவழி நாற்பது
66. வாகைப் பரந்தலை போரை நடத்திய மன்னன்?
கரிகாலன்
67.முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?
காய்ச்சின வழுதி
68. பல்யானை செங்குட்டுவன் தந்தை?
உதயஞ்சேரலாதன்
69. கரூரைத் தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு?
இரும்பொறை பிரிவு
70. தகடூரை ஆண்ட அதியமானை வென்ற சேரன்?
பெருஞ்சேரல் இரும்பொறை
71.கரிகாலனைப் பேரரசராக அறிவிக்க உதவிய போர்?
வெண்ணிப் போர்
72. திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன்?--
கரிகாலன்
73. கோச்செங்கெணன் என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்?
களவழி நாற்பது
74. கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி
75. கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்?
ஓரி
76. ”ஆய்” என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை?
பொதிகை மலை
77. பரம்பு மலையை ஆண்ட மன்னர்?
பாரி
78. திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?
காரி
79.இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
பாரதிதாசன்
80.”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?
உரிச்சொல்
81.மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?
8
82. ”காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?
முற்றெச்சம்
83. ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?
அழ. வள்ளியப்பா
84. ”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?
நன்னெறி
85. ”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது?
இரட்டைக்கிளவி
86. ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?
பாரதியார்
87.”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?
பாரதிதாசன்
88. ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
கவிமணி
89. ”மறவன்” எனும் சொல்லின் பொருள்?
வீரன்
90. ”கொன்றை வேந்தன்”-ஆசிரியர்?
அவ்வையார்
91. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர்?
திருவள்ளுவர்
92. தமிழைப் போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று?
லத்தீன்
93. ”பிச்சி” என்னும் சொல்லின் பொருள்?
முல்லை
94. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்
95. இடைச்சங்கம் இருந்த இடம்?
கபாட புரம்
96.”சித்திரப்பாவை”-ஆசிரியர்?
அகிலன்
97. ”திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்?
பரஞ்சோதி முனிவர்
98. ”பெண்ணின் பெருமை”-ஆசிரியர்?
திரு.வி.க.
99. ”பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்?
பாரதியார்
100. இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராகஇருந்தவர்?
நாமக்கல் கவிஞர்
Click here to join Whatsapp
0 Comments