
தமிழ் வினா விடை - இலக்கணம் (யாப்பு, அணி, உள்ளுறை, இறைச்சி, பொருள்கோள்)
1. கலிப்பாவின் இடைநிலைப்பாட்டு என்னும் உறுப்பு எதனைக் குறிக்கிறது
அ)தரவு, ஆ) தாழிசை, இ) தனிச்சொல், சுரிதகம்
2. கலிப்பாவின் உறுப்புகளுள் அசைநிலை என்பது
அ) அசையடி, ஆ) சொற்சீரடி, இ) கூன், ஈ) சுரிதகம்
3. தொல்காப்பியர் குறிப்பிடும் செய்யுள் உறுப்புகள் எத்தனை
அ) 35, ஆ) 34, இ) 36, ஈ) 37
4. கலிப்பாவின் உறுப்புகள் எத்தனை?
அ) 5, ஆ) 6, இ) 7, ஈ) 8
5. வாரம் என்னும் கலிப்பாவின் உறுப்பு எதனின் வேறு பெயர்
அ) வண்ணகம், ஆ) சுரிதகம், இ) தரவு, ஈ) தாழிசை
6. அசைக்கு உறுப்பாகும் எழுத்துகளாகக் காரிகையாசிரியர் குறிப்பிடுவது
அ)15, ஆ)14, இ) 13, ஈ) 14
7. ஆசிரியப்பாவில் இடம்பெறாத சீர்கள்
அ) புளிமா, கருவிளங்காய், ஆ) கூவிளங்காய், தேமாங்கனி, இ) கருவிளங்கனி, கூவிளங்கனி, ஈ) தேமா, புளிமா
8. வஞ்சிப்பாவில் மிகுதியும் இடம்பெறும் சீர்கள்
அ) தேமாங்கனி, கூவிளங்கனி, ஆ) கருவிளங்கனி, புளிமாங்கனி, இ) தேமாங்காய், புளிமாங்காய், ஈ) கருவிளம், புளிமா
9. யாப்பாசிரியர் குறிப்பிடும் மொத்தத் தொடைகளின் எண்ணிக்கை
அ) 35, ஆ) 5, இ) 43, ஈ) 8
10. மென்மை என்னும் மெய்ப்பாடு
அ) அழுகை, ஆ)இளிவரல், இ) அச்சம், ஈ) பெருமிதம்
11. இல்வலியுறுத்தல் என்பது எந்த நிலை மெய்ப்பாடு
அ) முதல் நிலை, ஆ) இரண்டாம் நிலை, இ) ஐந்தாம் நிலை, ஈ) மூன்றாம் நிலை
12. தெரிந்து உடம்படுதல் என்பது எந்த நிலை மெய்ப்பாடு
அ) முதல் நிலை, ஆ) இரண்டாம் நிலை, இ) ஐந்தாம் நிலை, ஈ) மூன்றாம் நிலை
13. ஊழணி தைவரல் என்பது எந்த நிலை மெய்ப்பாடு
அ) முதல் நிலை, ஆ) இரண்டாம் நிலை, இ) ஐந்தாம் நிலை, ஈ) மூன்றாம் நிலை
14. மெய்ப்பாட்டுக்குரிய ஒப்புமையாக எத்தனை இருக்கவேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகிறார்
அ) 12, ஆ) 13, இ) 10, ஈ) 11
15. பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் எண்ணிக்கை எத்தனை
அ) 21, ஆ) 20, இ) 22, ஈ) 23
16. இறை என்பது எந்த நிலை மெய்ப்பாடு
அ) அழுகை, ஆ)இளிவரல், இ) அச்சம், ஈ) பெருமிதம்
17. பண்ணைத் தோன்றிய …..
அ) நானான்கு, ஆ) எழுநான்கு, இ) எண்நான்கு, ஈ) அறுநான்கு
18. கிழக்கிடும் பொருளோடு ஐந்துமாகும் என்பது எதனைக் குறிக்கிறது
அ) உயர்ந்த பொருள், ஆ) தாழ்ந்த பொருள், இ) மேன்மைப் பொருள், ஈ) ஒழிந்த பொருள்
19. செய்யுளியலில் அமைந்துள்ள கட்டளையடிகள் எத்தனை
அ) 645, ஆ) 655, இ) 625, ஈ) 635
20. வெல்ல என்னும் உவம உருபு
அ) வினை, ஆ) பயன், இ) மெய், ஈ) உரு
21. மான என்னும் உவம உருபு
அ) வினை, ஆ) பயன், இ) மெய், ஈ) உரு
22. ஏய்ப்ப என்னும் உவம உருபு
அ) வினை, ஆ) பயன், இ) மெய், ஈ) உரு
23. காய்த்த என்னும் உவம உருபு
அ) வினை, ஆ) பயன், இ) மெய், ஈ) உரு
24. எந்த உவம உருபு வினைஉவமம் போக ஏனையவற்றிற்கும் வரும்
அ) உறழ, ஆ) மான, இ) அன்ன, ஈ) ஆங்க
25. உவமை தோன்றும் நிலைக்களன்கள்
அ) 4, ஆ) 5, இ) 6, ஈ)3
26. செய்யுட்குரிய சொல்லால் சீரைப் புனைந்து தொடுத்து வரின்
அ) அம்மை, ஆ) அழகு, இ) புலன், ஈ) இழைபு
27. பின்வரும் பாவில் நாலைச்சீர் வராது
அ) வெண்பா, ஆ) ஆசிரியப்பா, இ) கலிப்பா, ஈ) வஞ்சிப்பா
28. நிரைநிரைநேர்நிரை என்னும் வாய்ப்பாடு
அ) தேமாந்தண்ணிழல், ஆ) புளிமாந்தண்ணிழல், இ) கருவிளந்தண்ணிழல், ஈ) கூவிளந்தண்ணிழல்
29. புளிமாநறுநிழல் என்பது
அ) நேர்நேர்நிரைநிரை, ஆ) நிரைநேர்நிரைநிரை, இ) நிரைநிரைநிரைநிரை,ஈ) நேர்நிரைநிரைநிரை
30. காய்ச்சீர் என்பது
அ) வஞ்சிச்சீர், ஆ) வெண்சீர், இ) வஞ்சி உரிச்சீர், ஈ) கனிச்சீர்
31. கனிமுன்நிரை வரின்
அ) கலித்தளை, ஆ) ஒன்றிய வஞ்சித்தளை, இ) ஒன்றா வஞ்சித்தளை, ஈ) வெண்சீர் வெண்டளை
32. நாள் என்னும் அசைச்சீர் முன் நிரைவரின்
அ) ஆசிரியத்தளை, ஆ) கலித்தளை, இ) வெண்டளை, ஈ) வஞ்சித்தளை
33. 15 முதல் 17 எழுத்துவரை இருந்தால் தொல்காப்பியர் என்ன அடி என்று கூறுகிறார்
அ) சிந்தடி, ஆ) கழிநெடிலடி, இ) நெடிலடி, ஈ) அளவடி
34. 7 முதல் 9 எழுத்துவரை இருந்தால் தொல்காப்பியர் என்ன அடி என்று கூறுகிறார்
அ) சிந்தடி, ஆ) கழிநெடிலடி, இ) நெடிலடி, ஈ) அளவடி
35. 1- 3-4 சீர்களில் அமையும் தொடை
அ) ஒரூஉ, ஆ) கூழை, இ) மேற்கதுவாய், ஈ) பொழிப்பு
36. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி என்னும் தொடர் என்ன தொடை
அ) கூழை மோனை, ஆ) பொழிப்பு மோனை, இ) ஒரூஉ மோனை, ஈ) முற்று மோனை
37. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் என்னும் தொடர் என்ன தொடை
அ) ஒரூஉ எதுகை, ஆ) கூழை எதுகை, இ) கீழ்க்கதுவாய் எதுகை, ஈ) பொழிப்பு எதுகை
38. பலவிகற்பமாய் அடிதோறும் தனிச்சொல் பெற்று வருவது
அ) நேரிசை வெண்பா, ஆ) இன்னிசை வெண்பா, இ) ஒரு விகற்பம், ஈ) இரு விகற்பம்
39. ஆய்த எழுத்து தொடர்ந்து பல்கிப்பெருகி வரும் வண்ணம்
அ) அகப்பாட்டு வண்ணம், ஆ) நலிபு வண்ணம், இ) சித்திர வண்ணம், ஈ) ஒழுகு வண்ணம்
40. வஞ்சியுரிச்சீர் பயின்று தொடர்ந்து மிக்குவரும் வண்ணம்
அ) ஏந்தல் வண்ணம், ஆ) தூங்கல் வண்ணம், இ) முடுகு வண்ணம், ஈ) உருட்டு வண்ணம்
41. எத்தனை சீர்கள் கொண்டவையே அடி எனத் தொல்காப்பியர் கூறுகிறார்
அ) அசைச்சீர், ஆ) இருசீர், இ) முச்சீர், ஈ) நாற்சீர்
42. இயற்சீர் வெண்டளையால் மட்டும் பாடல் அமைவதால் வரும் ஓசை
அ) ஏந்திசை செப்பல், ஆ)தூங்கிசை செப்பல், இ) ஒழுகிசை செப்பல், ஈ) எதுவுமில்லை
43. அடிகளை முன்பின்னாக மாற்றமுடியாமல் நிலையாக நிற்கும். மாற்றினால் பொருள் சிதையும்
அ) இணைக்குறள் ஆ) நிலைமண்டிலம், இ) அடிமறிமண்டிலம், ஈ) நேரிசை
44. இருவகை ஆசிரியத்தளையால் அமைந்து பாடலில் வரும் ஓசை
அ) ஏந்திசை அகவல், ஆ)தூங்கிசை அகவல், இ) ஒழுகிசை அகவல், ஈ) இசைநிறை அகவல்
45. நேர் ஈற்று இயற்சீர் இந்தப் பாவில் வராது
அ) வெண்பா, ஆ) ஆசிரியப்பா, இ) கலிப்பா, ஈ) வஞ்சிப்பா
46. தொல்காப்பியரின் செய்யுளியல் எத்தனையாவது இயலாக அமைகிறது
அ) 9, ஆ) 7, இ) 8, ஈ) 6
47. யாப்பருங்கலக்காரிகை எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது
அ) 2, ஆ) 3, இ) 4, ஈ) 5
48. தாமரைச்சேவடி என்பது என்ன உவமம்
அ) வினை, ஆ) பயன், இ) மெய், ஈ) உரு
49. கருப்பொருட்களில் எவை ஒழிந்தவற்றை உள்ளுறை இடமாகக் கொள்ளும்
அ) புள், ஆ) பறை, இ) தெய்வம், ஈ) மா
50. இறைச்சி குறித்து தொல்காப்பியர் எந்த இயலில் விளக்குகிறார்
அ) உவமவியல், ஆ) அகத்திணையியல், இ) பொருளியல், ஈ) களவியல்
51. நகை என்பது உள்ளுறை உவமையின் எத்தனையாவது வகை
அ) 2, ஆ) 3, இ) 1, ஈ) 4
52. உவமை அணியின் வகைகள் எத்தனை
அ) 23, ஆ)24, இ) 22, ஈ) 25
53. ஒரே பாடலில் பொருள் உவமையாகவும், உவமை பொருளாகவும் அமைவது
அ) நிந்தை உவமை, ஆ) அபூத உவமை, இ) இதரவிதர உவமை, ஈ) இல்பொருள் உவமை
54. ஒரு பொருளைக் குறிப்பினால் மறுத்துக்கூறுவது எவ்வகையணி
அ) வேற்றுப்பொருள், ஆ) விபாவனை, இ) முன்னவிலக்கு, ஈ) ஒட்டணி
55. தன்மையணி எத்தனை வகைகளைக் கொண்டது
அ) 3, ஆ)4, இ)5, ஈ) 6
56. அதிசய அணியின் வகைகள் எத்தனை?
அ) 6, ஆ)5, இ) 7, ஈ)4
57.புகழ்வது போலப் பழித்திறம் புனைதல் எவ்வணியின் வகை
அ) தன்மேம்பாட்டுரை, ஆ) இலேசம், இ) உதாத்தம் ஈ) அவநுதி
58. மாறுபட்ட சொல்லானும் பொருளானும் மாறுபட்ட தன்மை விளைவு தோன்ற வருவது
அ) மாறுபடுபுகழ்நிலை, ஆ) புகழாப்புகழ்ச்சி, இ) விரோதவணி, ஈ) விசேடவணி
59. தடைமொழியணி என்பது இதனின் வேறுபெயர்
அ) ஒட்டணி, ஆ) விபாவனை, இ) தீவகவணி, ஈ) முன்னவிலக்கு
60. நோக்கணி என்பது இதனின் வேறுபெயர்
அ) அதிசயம், ஆ)தற்குறிப்பேற்றம், இ) நிரல்நிரை, ஈ) நுட்பம்
61. இரட்டுறமொழிதல் என்பது இதனின் வேறுபெயர்
அ) விசேடம், ஆ) சிலேடை, இ) உதாத்தம் ஈ) அவநுதி
62.எந்த உவமையணியை இல்பொருள் உவமையணி என்று கூறுவர்
அ) நிந்தை உவமை, ஆ) அபூத உவமை, இ) இதரவிதர உவமை, ஈ) இல்பொருள் உவமை
63. ஒரு பொருளைக் கொடுத்து வேறொரு பொருளை பெற்றுக் கொள்வதாகச் சொல்வது
அ) நிதரிசனம், ஆ) பரிவருத்தனை, இ) விரோதம் ,ஈ) சங்கீரணம்
64. தனியே நின்று ஒரு பொருள் தந்து முற்றுப்பெறுவது
அ) முத்தகம், ஆ) குளகம், இ) தொகைநிலை, ஈ) தொடர்நிலை
65. வாழ்த்தணி தண்டியலங்காரத்தில் எத்தனையாவது அணியாகக் கூறப்படுகிறது
அ) 31, ஆ) 33, இ) 28, ஈ) 34
66. உவமைப்போலி என்று வழங்கப்படும் அணி
அ) பிறிதுமொழிதல், ஆ) விசேடவணி, இ) ஒட்டணி, ஈ) புணர்நிலை
67.வேற்றுப்பொருள் வைப்பணியைப் பிறபொருள் வைப்பு என்று கூறும் நூல்
அ) நேமிநாதம், ஆ) வீரசோழியம், இ) பன்னிருபாட்டியல், ஈ) தொல்காப்பியம்
68. மொழிமாற்று நிரல்நிறை என்பது
அ) எதிர்நிரல்நிரை, ஆ) முறைநிரல்நிரை, இ) பெயர்நிரல்நிரை, ஈ) எதிர்நிரல்நிறை
69. இன்ன தன்மை உடையவர்க்கு இன்னது நிகழ்க என்று புலவர்கள் கூறுவது
அ) ஒப்புமைக்கூட்டம், ஆ) விசேடம், இ) வாழ்த்து, ஈ) நிதரிசனம்
70. சாந்தம் எம்மொழி இலக்கணத்தில் காணப்படும் மெய்ப்பாடு
அ) தமிழ், ஆ) தெலுங்கு, இ) வடமொழி, ஈ) மலையாளம்
71. மறைந்து போன தமிழ் நூல்கள் நூலின் ஆசிரியர்
அ) வையாபுரிப்பிள்ளை, ஆ) மயிலை.சீனி.வேங்கடசாமி, இ) தெ.பொ.மீ, ஈ) மு.வ.
72. உவமம் எத்தனை வகைப்படும்
அ) 3, ஆ) 2, இ) 4, ஈ) 5
73. மெய்ப்பாட்டியலில் அழிவில் கூட்டம் எத்தனை
அ) 7, ஆ)8, இ) 16, ஈ) 32
74. அழிவில் கூட்ட மெய்ப்பாடுகள் எப்பொழுது நிகழும்
அ) இயற்கைப்புணர்ச்சி, ஆ) திருமணம் பிறகு, இ) திருமணம் முன்பு, ஈ) உடன்போக்கின் போது
75. அழிவில் கூட்டத்திற்குரிய பொருட்கள் எத்தனை?
அ) 12, ஆ) 10, இ) 11, ஈ) 9
76. அகப்பொருட்கே உரிய உவமம் எது?
அ) ஏனை உவமம், ஆ) உள்ளுறை உவமம், இ) பொருள் உவமம், ஈ) பயன் உவமம்
77. இறைச்சிப் பொருள் உரிப்புறத்துத் தோன்றும் என்று கூறிய உரையாசிரியர்
அ) பேராசிரியர், ஆ) இளம்பூரணர், இ) நச்சினார்க்கினியர், ஈ) கல்லாடர்
78. பொருட்புறத்து இறைச்சிப் பொருள் தோன்றும் என்று கூறியவர்
அ) பேராசிரியர், ஆ) இளம்பூரணர், இ) நச்சினார்க்கினியர், ஈ) கல்லாடர்
79. தலைவி உள்ளுறை கூறும்போது எந்தக் கருப்பொருளை அமைப்பாள்
அ) தான் அறிந்த கருப்பொருள், ஆ) வேறு நிலத்துப் பொருள், இ) உணர் பொருள், ஈ) அந்நிலத்து உள்ள அனைத்துக் கருப்பொருள்
80. தோழி உள்ளுறை கூறும்பொழுது எந்தக் கருப்பொருளை அமைப்பாள்
அ) தான் அறிந்த கருப்பொருள், ஆ) வேறு நிலத்துப் பொருள், இ) உணர் பொருள், ஈ) அந்நிலத்து உள்ள அனைத்துக் கருப்பொருள்
81. உள்ளுறை உவமம் கூறுவதில் யாருக்கு இடவரையறை இல்லை
அ) பாங்கன் ஆ) தலைவன், இ) செவிலித்தாய், ஈ) தமர்
82. உள்ளுறை உவமம் அதிகமாக இடம்பெற்றுள்ள இலக்கிய நூல்
அ) குறுந்தொகை, ஆ) நற்றிணை, இ) ஐங்குறுநூறு, ஈ) அகநானூறு
83. நன்னூலார் விற்பூண் பொருள்கோளை எத்தனையாவதாக நிரல்படுத்துகிறார்
அ) 3, ஆ)5, இ)7, ஈ)4
84. தொல்காப்பியர் அடிமறிப் பொருள்கோளை எத்தனையாவதாக நிரல்படுத்துகிறார்
அ) 1, ஆ) 2, இ)3, ஈ) 4
85. எழுவாயிறுதி நிலைமொழி தம்முள் பொருள்நோக்குடையது
அ) பூட்டுவில், ஆ) தாப்பிசை, இ) கொண்டுகூட்டு, ஈ) அளைமறிபாப்பு
86. யாப்படி பலவினும் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது
அ) பூட்டுவில், ஆ) தாப்பிசை, இ) கொண்டுகூட்டு, ஈ) அளைமறிபாப்பு
87.இடைநிலை மொழியே ஏனை ஈரிடத்தும் நடந்து பொருளை நண்ணுதல்
அ) பூட்டுவில், ஆ) தாப்பிசை, இ) கொண்டுகூட்டு, ஈ) அளைமறிபாப்பு
88. இறைச்சிப்பொருளை வடநூலார் எப்படி அழைப்பர்
அ) தற்சமம், ஆ) தற்பவம், இ) தொனி, ஈ) நவரசம்
89.உவமானம், உவமேயம் இரண்டிற்கும் எவ்வித பேதமின்றி சொல்லப்படுவது எந்த அணி
அ) உவமை, ஆ) உருவகம், இ) தீவகம், ஈ) பாவிகம்
90. விலக்கணியின் பாகுபாடுகள் எத்தனை?
அ) 12, ஆ)14, இ) 13, ஈ) 11
91. மெல்லியவாய சொற்களால் சிறந்த பொருள் பற்றி வருவது
அ) அம்மை, ஆ) அழகு, இ) தோல், இ) தொன்மை
92. வெண்தளை வரப்பெற்று வெள்ளோசை தழுவி ஒருபொருள்மேல் ஈற்றடி முச்சீரால் வரின்
அ) கலிவெண்பா, ஆ) மருட்பா, இ) கொச்சகக் கலிப்பா, ஈ) கலிப்பா
93. குறள் வெண்பாவின் இனங்கள் எத்தனை?
அ) 3, ஆ) 2, இ) 4, ஈ) 5
94. தற்சிறப்புப் பாயிரம் எத்தனை காரிகளைக் கொண்டுள்ளது
அ) 3, ஆ) 4, இ) 5, ஈ) 6
95. யாப்பருங்கலத்தில் அமைந்துள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை
அ) 65, ஆ)60, இ) 70, ஈ) 75
96. வேற்றுமையணியை வியதிரேகம் என்று கூறும் நூல் யாது?
அ) தண்டியலங்காரம், ஆ) வீரசோழியம், இ) இலக்கணவிளக்கம், ஈ) நன்னூல்
97. விரவணி என்று அழைக்கப்படுவது
அ) ஒட்டணி, ஆ) சங்கீரணம், இ) விசேடம், ஈ) அவநுதி
98. யாப்பிலக்கணக் குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்
அ) 6, ஆ)8, இ)9, ஈ)7
99. மறைந்து போன யாப்பிலக்கண நூல்கள் குறித்து பதிவுசெய்த உரை
அ) காரிகையுரை, ஆ) விருத்தியுரை, இ) களவியலுரை, ஈ) இளம்பூரணருரை
100. பல்காயம் என்பது
அ) அணி இலக்கண நூல், ஆ) யாப்பிலக்கணம், இ) எழுத்திலக்கணம், ஈ) சொல்லிலக்கணம்
0 Comments