
தமிழ் வினா விடை (தமிழ் மொழி வரலாறு தொடர்பாக..)
1. மொழி அமைப்பின் ஆய்வில் அடங்குயுள்ள மூன்று அடிப்படைகளிலிருந்து வேறுபடும் ஒன்றைக் குறிப்பிடுக
அ) தொடரியல், ஆ)உருபனியல், இ) மரபியல், ஈ) ஒலியனியல்
2. மொழியில் அமைந்துள்ள மூவகைச் சொல்லோடு பொருந்தாத ஒன்றைக் குறிப்பிடுக
அ) ஒட்டுநிலை, ஆ) தனிநிலை, இ) உட்பிணைப்பு நிலை, ஈ) புதைநிலை
3. யார் பாடிய தேவாரத்தில் அருள், இரு, ஒழி, பெறு போன்றவை துணைவினைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன
அ) சம்பந்தர், ஆ) அப்பர், இ) சுந்தரர், ஈ) மாணிக்கவாசகர்
4.தமிழ் என்ற பெயருக்கு நிகராக சமஸ்கிருதப் பெயர் திராவிட என்பதாம் என்றவர் யார்?
அ) ஹீராஸ், ஆ) கால்டுவெல், இ) கமில்சுவலபில், ஈ) ஹால்
5.ஒலியை ஆராயும் முறையை எத்தனையாக வகுக்கின்றனர்
அ) 2, ஆ) 4, இ) 3, ஈ) 5
6. மொழிகளில் காணப்படும் சொற்களின் உள் அமைப்பை ஆராய்வது
அ) உருபனியல், ஆ) எழுத்தியல், இ) உறுப்பியல், ஈ) பொருளியல்
7.கூயி எம்மாநிலத்தில் பேசப்படுகிறது?
அ) கேரளம், ஆ) ஒரிசா, இ) மைசூர், ஈ) பீஹார்
8.திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு என்னும் நூலினை எழுதியவர்
அ) எமனோ, ஆ) பர்ரோ, இ) யூல்ஸ் ப்ளாக், ஈ) கால்டுவெல்
9. கீழ்வருவனவற்றுள் திருந்திய மொழி எது?
அ) படக, ஆ) நாயகி, இ) மால்டா, ஈ) குடகு
10. ஒரு கூட்டத்தைச் சார்ந்தவர் தமக்குள் தடையின்றி விளங்குமாறு இயல்பாகப் பேசுவது
அ) குறுமொழி, ஆ) கிளைமொழி, இ) சிறப்புமொழி, ஈ) பொதுமொழி
11.உயர்திணையில் பெண்பால் என்ற பகுப்பு இல்லாத மொழி
அ) தமிழ், ஆ)தெலுங்கு, இ) கன்னடம், ஈ) மலையாளம்
12. இணைப்புப் பெயருக்கு ஈடாகத் திராவிட மொழிகளில் வழங்குவது
அ) அடுக்குத்தொடர், ஆ) இரட்டைக்கிளவி, இ) பெயரெஞ்சுகிளவி, ஈ) மங்கலவழக்கு
13. எழுத்தும் இலக்கியமும் அற்ற திராவிட மொழிகளுள் ஒன்று எது?
அ) துளு, ஆ) குடகு, இ) கோண்டா, ஈ) கன்னடம்
14. என் என்னும் சொல் யார் காலத்தில் அன் என்று மாறியது?
அ) பல்லவர், ஆ) பாண்டியர், இ) சேரர், ஈ) சோழர்
15. மொழியின் சிறப்புடைய மிகச்சிறிய அடிப்படை அலகு
அ) ஒலியன், ஆ) ஒலி, இ) உருபன், ஈ) மாற்றொலி.
16. தொடரியல் பற்றி ஆராய்ந்த கொள்கைகளில் சிறந்தது எது?
அ) அண்மை உறுப்பு கொள்கை, ஆ) உருபனியல் கொள்கை, இ) மரபிலக்கணக் கொள்கை, ஈ) மாற்றிலக்கணக் கொள்கை
17. மி, சி, ஆட்டி ஆகிய பெண்பாற் விகுதிகள் அதிகமாக யாருடைய காலத்தில் கையாளப்பட்டன
அ) பல்லவர் காலம், ஆ) சோழர் காலம், இ) பாண்டியர், ஈ) சங்க காலம்
18. ர,ல என்ற உயிர்மெய் எழுத்துகள் மொழிக்கு முதலில் வந்தது யாருடைய காலத்தில்
அ) பல்லவர் காலம், ஆ) சோழர் காலம், இ) பாண்டியர், ஈ) சங்க காலம்
19. கன், மன் போன்ற ஆண்பாற் விகுதிகள் பயன்படுத்தப்பட்ட காலம்
அ) பல்லவர் காலம், ஆ) சோழர் காலம், இ) பாண்டியர், ஈ) சங்க காலம்
20. மணிப்பிரவாள நடை யாருடைய காலத்தில் தோன்றத் தொடங்கியது
அ) பல்லவர் காலம், ஆ) சோழர் காலம், இ) பாண்டியர், ஈ) சங்க காலம்
21. யகரம் அகரத்தோடும் ஊகாரத்தோடும் ஊர்ந்து வந்த காலம் எது
அ) பல்லவர் காலம், ஆ) சோழர் காலம், இ) பாண்டியர், ஈ) சங்க காலம்
22.பல்லவர் காலத்தில் மொழிக்கு இறுதியில் வராத உயிர்கள் எவை?
அ) இ,ஈ, ஆ) உ, ஊ, இ) எ, ஏ, ஈ) எ,ஒ
23. இறந்தகாலம் இறப்பல்லாக் காலம் என இரண்டு வேறுபாடுகள் மட்டும் இருந்த காலம்
அ) சங்ககாலம், ஆ) தொல்காப்பியர் காலம், இ) சங்கமருவிய, ஈ) பல்லவர்
24. சோழர் காலத்தில் வேற்றுநிலை வழக்கில் வராத மெய்யொலி எது?
அ) ங், ஆ) ச், இ) ஞ், ஈ) ப்
25. பல்லவர் காலத் தமிழ் அறிய நமக்குத் துணையாய் இருப்பவை
அ) நீதி இலக்கியம், ஆ) சங்க இலக்கியம், இ) பக்தி இலக்கியம் ,ஈ) காப்பியங்கள்
26. கள் விகுதி பதிலீடு பெயர்களில் வரத்தொடங்கிய காலம்
அ) பல்லவர் காலம், ஆ) சோழர் காலம், இ) பாண்டியர், ஈ) சங்க காலம்
27.பேச்சு மொழியையும் எழுத்து மொழியையும் ஆராய்ந்த மொழியியல் அறிஞர்
அ) கால்டுவெல், ஆ) ஜி.யூ.போப். இ) கிட்டல், ஈ) மீடர்
28. சீ, சே, சை என்ற ஒலிகள் எவ்வகை மொழிகளாகும்
அ) விலங்கு மொழி, ஆ) தட்டை மொழி, இ) உணர்ச்சி மொழி, ஈ) எழுத்து மொழி
29. ஒலியை ஆராயும் முறைகள் மொத்தம் எத்தனை
அ) 2, ஆ)3, இ) 4, ஈ)5
30. ஒலியுறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒலியின் பிறப்பை ஆராயும் முறை
அ) பெளதீக ஒலியியல், ஆ) உச்சரிப்பு ஒலியியல், இ) கேட்பொலியியல், ஈ) ஒலியியல்
31. ஒரு மொழியில் காணப்படும் பொருளைக் காட்டும் சின்னஞ் சிறு கூறுகள்
அ) ஒலியன், ஆ)ஒலியனியல், இ) உருபன், ஈ) உருபனியல்
32. தனிநிலை மொழி எனப்படுவது
அ) சமஸ்கிருதம், ஆ) தமிழ்மொழி, இ) சீனமொழி, ஈ) இலத்தீன்
33. மார்ப்பாலஜி என்னும் நூலின் ஆசிரியர்
அ) பைக், ஆ) நைடா, இ) ஹேரிஸ், ஈ) புளூம்பீல்டு
34.அமெரிக்க மொழியியல் வரலாற்றில் 1933 – 1950 யாருடைய சகாப்தம்
அ) பைக், ஆ) நைடா, இ) ஹேரிஸ், ஈ) புளூம்பீல்டு
35. பல்லிதழ் ஒலி என்பது
அ) ர, ஆ)வ, இ)ழ, ஈ) ற
36. ஆம்பல், தாமரை, வெள்ளம் என்பவை
அ) பேரெண், ஆ) சிற்றெண், இ) இடை எண், ஈ) குறை எண்
37. சங்ககாலத்தில் எத்தனை மெய்கள் மொழிக்கு இறுதியில் வருகின்றன
அ) 10, ஆ) 11, இ) 12, ஈ) 9
38. வடமொழியில் முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
அ) 59, ஆ) 49, இ) 39, ஈ) 50
39. வியஞ்சன எழுத்துகள் என்று வடமொழியில் கூறப்படுவது
அ) உயிர் எழுத்து, ஆ) மெய் எழுத்து, இ) உயிர்மெய் எழுத்து, ஈ) ஆய்தம்
40. வடமொழியில் எத்தனை பால்கள் உள்ளன
அ) 5, ஆ) 4, இ) 3, ஈ)2
41. தொல்காப்பியர் காலத் தமிழில் எத்தனை அஃறிணைச் சொற்களில் மகரம் னகரமாகத் திரியும்
அ) 10, ஆ)9, இ)8, ஈ) 7
42. எத்தனை உரிச்சொற்களுக்குத் தொல்காப்பியர் பொருள் கூறியிருந்தார்?
அ) 135, ஆ) 126, இ) 125, ஈ) 145
43.நிகழ்காலப் பெயரெச்சம் வழக்கில் இல்லாத காலம்
அ) சங்ககாலம், ஆ) தொல்காப்பியர் காலம், இ) சங்கம் மருவிய காலம், ஈ) பக்திக் காலம்
44. மொழிமுதல் யகரம் ஆகாரமாக மாறியது குறித்து எந்த நூல் பதிவு செய்கிறது
அ) நற்றிணை, ஆ) புறநானூறு, இ) பரிபாடல், ஈ) பதிற்றுப்பத்து
45. வினையில் மட்டுமே வந்த மார் ஈறு எந்தக் காலத்தில் பெயர்ச்சொல்லுடன் வந்தது
அ) சங்ககாலம், ஆ) தொல்காப்பியர் காலம், இ) பக்திக்காலம், ஈ) நீதிக்காலம்
46.வினைமுற்றின் அம் விகுதி ஓம் எனத் திரிந்த காலம்
அ) பாண்டியர், ஆ) சோழர், இ)பல்லவர், ஈ) சங்ககாலம்
47. வடமொழிச்சொற்கள் மிகுதியாக வந்து கலந்த காலம்
அ) பாண்டியர், ஆ) சோழர், இ)பல்லவர், ஈ) சங்ககாலம்
48. வடமொழியையும் தமிழையும் இணைத்து இலக்கண வரையறைக்குட்படுத்தி எழுதப்பட்ட நூல்
அ) நேமிநாதம், ஆ) நன்னூல், இ) வீரசோழியம், ஈ) தண்டியலங்காரம்
49. யாருடைய காலத்தில் பி, வி க்குப் பதிலாக வை, செய், பண்ணு போன்றன வந்தன
அ) பாண்டியர், ஆ) சோழர், இ)பல்லவர், ஈ) சங்ககாலம்
50. இரட்டைப் பன்மை விகுதிகள் வினைச்சொற்களில் பயன்படுத்திய காலம் எது?
அ) பாண்டியர், ஆ) சோழர், இ)பல்லவர், ஈ) சங்ககாலம்
51.சொற்களின் தொடரமைப்பைக் கருத்தில் கொண்டு அமைக்கும் மொழியை எவ்வாறு குறிப்பர்
அ) பேச்சு மொழி, ஆ) எழுத்து மொழி, இ) சைகை மொழி, ஈ) குறியீட்டு மொழி
52.தொல்கப்பியர் காலத்தில் உரப்பு ஒலியாக வந்த எழுத்து எது?
அ) ர, ஆ) ற, இ) ல, ஈ)ள
53. வட இந்திய பழங்கால மக்கள் வடமொழியும் திராவிட மொழியும் கலந்து பேசிய பேச்சு மொழி
அ) பிராகிருதம், ஆ) பாலி, இ) திராவிடம், ஈ) ஆரியம்
54.குணக்கு என்றால் சொல்லால் அறியப்படும் திசை
அ) கிழக்கு, ஆ) மேற்கு, இ) வடக்கு, ஈ) தெற்கு
55. வரலாற்று ஒப்பு மொழியின் தந்தை
அ) ராங்க், ஆ) கிரீம், இ) பாப், ஈ) நைடா
56. திருந்திய திராவிட மொழிகள், திருந்தா திராவிட மொழிகள் எனப் பகுத்தவர்
அ) குண்டர்ட், ஆ) வீரமாமுனிவர், இ) பர்ரோ, ஈ) கால்டுவெல்
57. எதிரொலிச் சொற்களை தமிழ்மொழி எங்கிருந்து பெற்றது
அ) மராத்தி, ஆ) இந்தி, இ) கோண்டா, ஈ) முண்டா
58.இடைச்சொற்களை சீனமொழியினர் எவ்வாறு வழங்குகின்றனர்?
அ) வழக்குச்சொற்கள், ஆ) பேச்சுச் சொற்கள், இ) வெறுஞ்சொற்கள், ஈ) சொற்கள்
59. தமிழுக்கும் வடமொழிக்கும் பொது எழுத்துகளால் ஆகிய வடசொற்கள் தமிழில் புகின் அவற்றை எவ்வாறு குறிப்பிட்டனர்
அ) தற்சமம், ஆ) தற்பவம், இ) வடமொழிக் கலப்பு, ஈ) கலப்பு மொழி
60. தமிழில் இல்லாத வடமொழிக்கே உரிய எழுத்துகளையுடைய வடசொற்கள் தமிழில் வழங்கின் அவற்றை எப்பெயரால் வழங்கினர்?
அ) தற்சமம், ஆ) தற்பவம், இ) வடமொழிக் கலப்பு, ஈ) கலப்பு மொழி
61. தந்தையை அச்சன் என்று குறிப்பிட்டவர் எப்பகுதியினர்
அ) கற்கா நாடு, ஆ) குட்ட நாடு, இ) குடநாடு, ஈ) பூழிநாடு
62. இகுளை என்று தோழியை வழங்கிய நாட்டினர்
அ) அருவா, ஆ) குட்டம், இ) சீத நாடு, ஈ) பூழி நாடு
63. சொன்றி என்று சோற்றைக் குறிப்பிடவர்
அ) குட்டநாடு, ஆ)குடநாடு, இ) சீதநாடு, ஈ) அருவா நாடு
64. பொதுமொழியிலிருந்து வேறுபட்டு செயற்கையாக அமைக்கப்படும் மொழிக்கூறுகளை எவ்வாறு குறிப்பர்
அ) கிளைமொழி, ஆ) குறுமொழி, இ) இசைமொழி, ஈ) போலிமொழி
65. வடுகர் மொழி என்பது எம்மொழி
அ) கன்னடம், ஆ) தெலுங்கு, இ) மலையாளம் ,ஈ) இந்தி
66.திருவாசகத்தில் இடம்பெறும் அச்சன், அதெந்து எனும் சொற்கள் எத்தகு சொற்கள்?
அ) இயற்சொல், ஆ) திரிசொல், இ) திசைச்சொல், ஈ) வடசொல்
67.லாரிங்கோஸ்கோப் என்பது?
அ) எழுத்து பிறப்பு, ஆ) ஒலி பிறப்பு, இ) சொற்பிறப்பு, ஈ) உயிர்ப்பிறப்பு
68.உயிர் முக்கோணம் என்று குறிப்பிடப்படும் ஒலிகள்
அ) வல்லினம், ஆ) சுட்டு, இ) வினா, ஈ) விடை
69.திராவிட மொழிகளுள் மூக்கொலி மிக்கு நிற்கும் மொழி எது?
அ) தமிழ், ஆ) மலையாளம், இ) கன்னடம், ஈ) தெலுங்கு
70. புளும்பீல்ட் என்னும் அமெரிக்க அறிஞர் ஒலித்திரிபுகளை எத்தனை வகைகளாகப் பாகுபாடு செய்தார்
அ) 4, ஆ) 5, இ) 6, ஈ)7
71. செம்மொழித்தகுதியுடைய நூல்களாக வரையறுக்கப்பட்டவை எத்தனை?
அ) 41, ஆ) 42, இ) 40, ஈ) 39
72. செம்மொழித் தகுதியுடைய நூல்களில் இடம்பெறும் இலக்கண நூல்கள் எத்தனை?
அ) 3, ஆ)1, இ) 2, ஈ) 4
73. தமிழ் செம்மொழி குறித்து எந்த நூலில் முதன் முதல் குறிப்பிடப்பட்டது?
அ) தமிழ் மொழி வரலாறு, ஆ) தமிழ் இலக்கிய வரலாறு, இ) தமிழர் வரலாறு, ஈ) பண்பாட்டு வரலாறு
74. பன்மை விகுதியாகிய கள் முதன்முதலில் தொல்காப்பியத்தில் எச்சொல்லில் இடம்பெறுகிறது?
அ) மாக்கள், ஆ) மக்கள், இ) ஆக்கள், ஈ) பூக்கள்
75. பின்வருவனவற்றுள் எச்சொல்லை மட்டும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்
அ) மருண்ம், ஆ) கேண்ம், இ) போன்ம், ஈ) சென்ம்
76. படர்க்கை வினையில் பால்வேறுபாட்டை உணர்த்தாத திராவிடமொழி
அ) தமிழ், ஆ) மலையாளம், இ) தெலுங்கு, ஈ) கன்னடம்
77. தெலுங்கு மொழியை ஆராய்ந்தவர்
அ) குண்டர்ட், ஆ) பிரெளன், இ) கிட்டல், ஈ) மோக்லிங்
78. முண்டா மொழி என்று பெயரிட்டு வழங்கியவர்
அ) குமரில பட்டர், ஆ) மாக்ஸ்முல்லர், இ) கிட்டல், ஈ) குண்டர்ட்
79. ஆப்பு வடிவ எழுத்துகளைக் கண்டறிந்தவர்
அ) குமரில பட்டர், ஆ) சர் ஹென்றி ராலின்சன் இ) மோக்லிங் ஈ) பிரெளன்
80. தென்னிந்திய மொழிகளை மலபார் மொழிகள் என்று கூறியவர்
அ) குண்டர்ட், ஆ) ராஸ்மஸ் ராஸ்க் இ) யெஸ்பர்ஸன் ஈ) மோக்லிங்
81. தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்து எது?
அ) பிராமி எழுத்து, ஆ) கிரந்த எழுத்து, இ) வட்டெழுத்து, ஈ) தென் பிராமி எழுத்து
82. பிறமொழிச் சொற்களை மிகுதியும் தமிழ்ப்படுத்திய நூல் எது?
அ)மணிமேகலை, ஆ) சிலப்பதிகாரம், இ) சீவகசிந்தாமணி, ஈ)சூளாமணி.
83. பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள திருந்திய திராவிட மொழிகள் எத்தனை?
அ) 3, ஆ) 2, இ) 4, ஈ) 1
84. இருமை என்னும் வகைப்பாடு எம்மொழியில் இடம்பெற்றுள்ளது?
அ)வடமொழி, ஆ) தமிழ்மொழி, இ) தெலுங்குமொழி, ஈ) தோடாமொழி
85. பற்றேதும் – பத்தேதும் என இரட்டித்த றகரம் எந்தக் காலத்தில் இரட்டித்த தகரமாக மாறத் தொடங்கியது?
அ) சங்க காலத் தமிழ், ஆ) பல்லவர் காலத் தமிழ், இ) சோழர்காலத் தமிழ், ஈ) நாயக்கர்காலத் தமிழ்.
86. இனாம் என்னும் சொல் எம்மொழிச் சொல்
அ) உருது, ஆ) போர்ச்சுக்கீசியம், இ) இந்துஸ்தானி, ஈ) டச்சு.
87. செம்மொழிக்கான 41 நூல்களில் அகநூல்கள் எண்ணிக்கை?
அ) 13, ஆ) 12, இ) 14, ஈ) 11.
88. அறம் நிறைந்த மொழி என தமிழ்மொழியை அழைத்தவர்?
அ)ரஸ்க், ஆ) கால்டுவெல், இ) டாக்டர் குண்டர்ட்,ஈ)மாக்ஸ்முல்லர்.
89. த்ரியெம்பாவ – த்ரிபாவ – என்ற பெயரில் திருவெம்பாவை திருப்பாவை கொண்டாடும் நாடு?
அ) மலேசியா, ஆ) தாய்லாந்து, இ) இலங்கை, ஈ) இந்தோனேஷியா.
90. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்?
அ) 12.10. 2004, ஆ) 07. 11. 2004, இ) 18.10.2004, ஈ) 30.09.2004.
0 Comments